பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011,14:35 IST
இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி தாக்கும் பட்சத்தில் 50 செ.மீட்டர் உயரம் வரை கடலில் அலையின் சீற்றம் இருக்கும் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 11 ம் தேதி நடந்த அதே நாளில் இன்று 11 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பான் மீண்டும் வளர்ச்சி பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பூகம்பம், சுனாமியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். உலகம் முழுவதும் இருந்து நிவாரணப்பொருட்கள் இன்னும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது.
Source - Dinamalar News