வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஏங்குபவர்களும் தேடுபவர்களும் எல்லா காலகட்டத்திலும் இருக்கின்றனர். வருடாவருடம் வயது ஏறிக்கொண்டே போவதைப் போல, இப்படித் தேடுவோரின் எண்ணிக்கையானது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இந்தியாவுக்குள் கம்ப்யூட்டர் வந்த புதிதில், அதைக் கற்றுக்கொண்டவர்கள் மிக மிகக் குறைவுதான். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே கம்ப்யூட்டரைக் கற்றுக்கொண்டவர்களும் பயன்படுத்துபவர்களும் அதிகரித்தார்களே? இருபது வருடங்களுக்கு முன்பு வரை, வீட்டுக்கு வீடு சைக்கிள் என்றிருந்த நிலை இருந்தது. பிறகு படிப்படியாகப் பல வீடுகளில் மொப்பெட், பைக் போன்ற இரு சக்கர வாகனங்களைக் காணும் நிலை ஏற்பட்டது. சமீப வருடங்களாக சென்னை, கோவை போன்ற தமிழகத்தின் பெருநகரங்களில், சாலைகளில் எல்லாம் கார்களின் ஆக்கிரமிப்புதான்!
ஆசைகளும் தேவைகளும் பெருகிவிட்டதே இதற்குக் காரணம். இவற்றுக்கு நடுவே, உண்பதிலும் உறங்குவதிலும் குழப்பங்கள் வரத்தானே செய்யும்?! குறிப்பாக, சாப்பாட்டு விஷயங்களும் பெருகிவிட்டன. இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்தைக் கடந்து ஏகப்பட்ட உணவுகள் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவும், எளிதில் செரிக்காத உணவுகளாகவும் அறிமுகமாகிவிட்டன.
பணிச் சூழல்கள் ஒருபக்கம், படுத்துத் தூங்குவதில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் இன்னொரு பக்கம், வாகனப் பெருக்கத்தால் ஏற்படுகிற மாசு மற்றொரு பக்கம், அவற்றின் இரைச்சல்களால் ஏற்படுகிற மன உளைச்சல்கள் இன்னொரு பக்கம் எனத் திணறுகின்றனர், அன்பர்கள் பலரும்! இவர்கள் சத்தான உணவையும் நிம்மதியான தூக்கத்தையும் தேடுகின்றனர். ஒருநாள் உணவைக்கூட ஒழித்துவிடலாம். வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு, இரண்டு வாழைப்பழங்களை மட்டும் தின்றுவிட்டு, அன்றைய நாளை நகர்த்திவிடலாம். ஆனால், தூக்கத்துக்கு என்ன செய்வது?
இலவம் பஞ்சு மெத்தையும் ஜிலுஜிலு ஏ.ஸி-யும் இருந்தால் போதுமா? தூக்கம் வரவேண்டாமா? அப்படி நிம்மதியான தூக்கம் வருவதற்கு, ஆரோக்கியமான உடலும் அமைதியான மனமும் அவசியம் இருக்கவேண்டும்தானே?!
அவற்றைத் தரவல்லதுதான் மனவளக்கலைப் பயிற்சி. எத்தைத் தின்றால், பித்தம் தெளியும் எனத் தவிப்பவர்களுக்கான பயிற்சி இது! இந்தப் பயிற்சியை மேற்கொண்டால், உடலும் மனமும் தக்கையாகும்; வறட்டுப் பிடிவாதங்களும் முரட்டுக் குணங்களும் காணாமல் போகும். பிடிவாதம் இல்லையெனில், அங்கே விட்டுக்கொடுத்தல் வந்துவிடும். ஈகோ இல்லாத இடத்தில், அமைதியின் ஆட்சி சிறப்புற நடைபெறும். 'மனமது செம்மையானால்... மந்திரம் சொல்ல வேண்டாம்’ என்றாரே திருமூலர். மனத்தை மயிலிறகென வைத்துக் கொண்டால், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. மகிழ்ச்சியில் உள்ளம் நிறைந்திருந்தால், அந்த மகிழ்ச்சி வீடெல்லாம் நிறைந்திருக்கும். அதற்கான அனைத்தையும் வழங்கவல்லது, இந்த மனவளக்கலைப் பயிற்சி.சரி... மனவளக்கலையின், நரம்பு- தசைநார் மூச்சுப் பயிற்சியில் உள்ள ஏழு நிலைகளையும், அதை மேற்கொண்டால் விளையக்கூடிய பலன்கள் சிலவற்றையும் பார்த்தோம்.
இன்னும் சில பலன்களைப் பார்ப்போமா?
ஏழு நிலைப் பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு, அவற்றைச் செவ்வனே கடைப்பிடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்னையில் இருந்து மிக எளிதில் நிவாரணம் பெறலாம். 'அடச்சே..! காலைல என்ன சாப்பிட்டேன்னு மத்தியானமே மறந்துருச்சுப்பா!’, 'இன்னிக்கி இன்னன்ன காரியங்களை மறக்காம செய்யணும்னு ஒரு லிஸ்ட் எழுதி வைச்சிருந்தேன். பாழாப்போன என் ஞாபக மறதியால, அந்த லிஸ்ட்டைப் பார்க்கவே மறந்துட்டேன்னா பார்த்துக்கோயேன்!’ என்றெல்லாம் அலுத்துக் கொள்பவர்கள், இந்தப் பயிற்சியை மேற்கொண்டீர்களென்றால், மறதியில் இருந்து மறக்காமல் வெளியே வந்துவிடுவீர்கள்.
அன்பர்கள் சிலர், 'சனியின் பிடியில் இருந்துகூட தப்பித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது; சளியில் இருந்து தப்பவே முடியவில்லை; நிவாரணம் பெறமுடியவில்லை’ என அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். சதா காலம் ஒழுகின மூக்கும் சிந்தின கையுமாக இருப்பவர்கள், அதில் இருந்து மிக எளிதாக விடுதலை பெறலாம். சளித் தொந்தரவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், நமக்கு உடல் சோர்வையும் மூளைச் சோர்வையும் தரவல்ல கொடூரமான வில்லன், சளி!
சளிப் பிரச்னை இல்லையெனில், தலைச் சுற்றலோ தலை பாரமோ இருக்காது. இவை இரண்டும் இல்லையெனில், சோம்பலுக்கு இடமில்லை. எட்டு மணி நேரத்தைக் கடந்தும்கூட சுறுசுறுப்பாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன், மிக வேகமாக வேலையில் ஈடுபடலாம். அரை மணி நேரம் வேலை பார்த்ததுமே வருகிற களைப்பும் சோர்வும் பல காத தூரம் பறந்தோடிவிடும். எப்போதும் துடிப்பு; எந்நேரமும் விழிப்பு; எல்லா தருணங்களிலும் சுறுசுறுப்பு என உங்கள் வேலையில் கவனம் செலுத்த, இந்தப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.
உடலின் நரம்பு மண்டலம், காற்று மண்டலம், தசை மண்டலம் ஆகியவற்றில் சின்னதாகவோ பெரிதாகவோ என்ன விதமான நோய்கள் வந்திருந்தாலும், அதை மிக எளிதாக விரட்டிவிடலாம். சீக்கிரமே அவற்றில் இருந்து நிவாரணம் அடையலாம்.மன நோயால் பாதிக்கப்பட்டவர்களைக்கூட இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வைத்தால், மெள்ள மெள்ள அவர்கள் மன நோயில் இருந்து விடுபடுவதை அன்பர்கள் பலர் வியப்பும் பூரிப்புமாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். வலிப்பு முதலான நரம்புக் கோளாறு நோய்களும், ஏழு நிலைப் பயிற்சியால் எட்டாத திசைக்குச் சென்றுவிடும் என்பது உறுதி!
முக்கியமாக, அன்பர்கள் பலரும் தங்களது மகன் அல்லது மகளை அழைத்துக் கொண்டு, அறிவுத் திருக்கோயிலுக்கு வருகின்றனர். அந்த வேளையில், மனவளக்கலைப் பயிற்சிக்கு முன்பு வரை, கிரகிக்கும் திறன் குறைவானவர்களாக அந்தக் குழந்தைகள் இருந்ததாகவும் பயிற்சிக்குப் பிறகு அவர்களது கிரகிக்கும் திறனும் ஞாபக சக்தியும் கூடி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்து, எனக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்துள்ளனர்.
கிரகிக்கிற திறன், ஞாபக சக்தி, புத்திக்கூர்மை, எதையும் புத்திக்குள் பதிவு செய்து கொள்கிற ஆற்றல்... இவை மட்டும் ஒரு மாணவனுக்கு, நாளைய தலைமுறைக்கு, உங்கள் வீட்டின் செல்லக் குழந்தைகளுக்குப் போதுமா?
இந்தப் பயிற்சிகள் இன்னொன்றையும் தருகின்றன. பயிற்சியால் கிடைக்கிற சிந்தனையும் தெளிவும் அவர்களுக்குள் ஒழுக்கத்தை விதைக்கின்றன!
உயிரினும் மேலானது அல்லவா ஒழுக்கம்?!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா
தொகுப்பு: ஆர்.கே.பாலா

கோபால கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
''உலகத்தில் தங்கம் வெட்டி எடுப் பது குறைந்துகொண்டு வருவதும், பூமிக்கு அடியில் தங்க இருப்பு குறைவாக இருப்பதும் முக்கியக் காரணங்கள். பூமிக்குள் இருந்து இதுவரை சுமார் 1,70,000 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தோராயமான மதிப்பு 7.2 டிரில்லியன் (டிரில்லியன் என்பது லட்சம் கோடி) அமெரிக்க டாலர். ஆனால், உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்ஸிகள், நிறுவனப் பங்குகள், சேமிப்புகள், டெபாசிட்கள் போன்றவற்றின் மதிப்பு சுமார் 60 டிரில்லியன் டாலர். இது தங்கத்தின் மதிப்பைவிட சுமார் 8.5 மடங்கு அதிகம். அதாவது, உலக அளவில் மக்களி டம் அதிகப் பணம் இருக்கிறது. ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது என்பதால், அவர்கள் என்ன விலை என்றாலும் அதை வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள். இதனால்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை தங்கமாகப் பதுக்குகிறார்கள். இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் 1,500 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
உலக அளவில் பங்குச் சந்தை கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை கொடுத்த வருமானம் மைனஸ் 8 சதவிகிதம். அதே நேரத்தில், இதே காலத்தில் தங்கம் கொடுத்திருக்கும் வருமானம் 42 சதவிகிதம்.
ருக்கார். தா.கி. கொலை வழக்கில் எஸ்ஸார் உள்ளே இருந்தப்ப, அழகிரி வீட்டில் பாதுகாப்பைக் கவனித்த 'அட்டாக்’ பாண்டி, எஸ்ஸார் தரப்பினருக்கு எதிரான விஷயங்களை அழகிரி குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்தார். இதுவும் இன்னும் சில விஷயங்களுமாகச் சேர்ந்து அட்டாக்குக்கும் எஸ்ஸாருக்கும் இடையில் பகை ஏற்பட்டது.
இருந்ததால் தனக்கு நெருக்கமான உளவு அதிகாரியின் மூலமாக பாண்டியராஜனை தூக்கிட்டுப்போய் புதூரில் ரெண்டு நாள் அடைத்து வைத்தார்கள். அடிக்கவும் செய்தார்கள். அப்படியும் விடாம, 'இவன் கதைய முடிச்சாத்தான் அட்டாக் பயப்படுவான்’ன்னு கோபிக்கு சிக்னல் குடுத்துருக்காங்க என்பதாக எங்கள் விசாரணை தகவல் சொல்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த கோபி கோஷ்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்தல் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்த விவகாரத்தை வெச்சு, பாண்டியராஜனை அடிச்சு ரோட்ல போட்டு, காரை ஏத்திக் கொன்னுருக்கு. விஷயம் தெரிஞ்சு, எல்லாரையும் அப்பவே மதுரை பெரிய இடத்துல சத்தம் போட்டிருக்காங்க. அப்ப, 'எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்’னு சொல்லி தைரியம் கொடுத்த பொட்டு, அந்தக் கொலையை விபத்தா முடிச்சிருக்கார். அவனியாபுரம் இன்ஸ்பெக்டரா இருந்தவரும் இதுக்கு உடந்தை. விசாரணையில், கோபியே இதை எல்லாம் சொன்னான். பக்காவா வீடியோ எடுத்துருக்கோம்!'' என்று போலீஸ் தரப்பு சொல்லி அதிர்ச்சியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. அவர்களே தொடர்ந்து பேசினர்...
சொல்லுங்கம்மா’ன்னு பொட்டுவோட அம்மா காலில் விழுந்ததாலதான் மன்னனை மட்டும் அழகிரி பக்கத்துலயே விட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க கத்தி எடுத்துட்டு சுத்துவோம். ஆனா, அதை எடுக்காமலே காரியங்களை செய்வான் பொட்டு. இல்லாட்டி, இதுவரைக்கும் பிரச்னையே வராம இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’ன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்ஸார் கோபி. பாண்டியராஜன் கொலைக்குப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் எட்டு பேர் கை மாறி, திருச்சியில இருந்துச்சு. அதையும் கோபியோட கடிதத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சு இருக்கோம்...'' என்று முடித்தனர்.
கார்த்திகேயன்கிட்ட வருத்தப்பட்ட அழகிரி, தன் விசுவாசிகளை 'கோபியோட சகவாசம் வெச்சுக்க வேணாம்’னு சொல்லிட்டு, கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்சாரு.
விசாரணையின்போது, மதுரையை மையப்படுத்தி நடந்த கொலைகள், அடிதடிகள், கட்டப் பஞ்சாயத்துகள், பேரங்கள் உள்ளிட்டவை குறித்து ஒரு பெரிய பட்டியலே கொடுத்த கோபி, யாரைப் பிடித்தால் எதைக் கறக்கலாம் என்பதையும் போலீஸுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாராம். இதை வைத்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறது போலீஸ்.
அமைச்சர் அர்ஜுன்சிங், அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கை’யின்படி, புதிய பாடத்திட்டம் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 