Tuesday, June 14, 2011

தீர்மானம் போட்ட ஜெயலலிதா!

தீர்மானம் போட்ட ஜெயலலிதா!

திட்டம் தீட்டிய இந்திய கம்யூனிஸ்ட்..
மிழின விரோதி என ஜெயல லிதாவைக் கடுமையாக விமர்சிக்கும் தமிழ் இன உணர் வாளர்கள், இப்போது அவர் மீது பாராட்டு மழை பொழிகிறார்கள்!  கடந்த 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு சட்டப் பேரவையில் ஜெ-வால் முன்மொழியப் பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம்தான் இதற்குக் காரணம்!
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு, வழக்கம்போல உள்ளூர் அரசியல் செய் யாமல், தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தது, நல்ல விஷயம்! 
இந்தத் தீர்மானத்தில் இரண்டு விஷயங்கள். ''உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசு கடுமையான, நம்பத்தகுந்த குற்றங்களைச் செய்துள்ள தாக ஐ.நா.  குழு கண்டறிந்து உள்ளது. எனவே, போர்க் குற்றங்களை நிகழ்த்திய வர்களை, போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்த ஐ.நா. அவையை இந்திய அரசு வலியுறுத்தவேண்டும்!'' என்பது ஒன்று.
அடுத்தது, ''இலங்கை முகாமில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாகக் கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!'' என்பது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ''ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள். இந்தியாவிடம் இருந்து ராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை ராணுவம், 2008 கடைசியிலும் 2009 தொடக்கத்திலும் இலங்கைத் தமிழர்களைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தது. அதன் இறுதியில், போரை நிறுத்த இலங்கை அரசை மத்திய அரசு மூலம் நிர்ப்பந்தப்படுத்தாத அன்றைய முதல்வர் கருணாநிதியால், பலவித நாடகங்கள் நடத்தப்பட்டன. உச்சகட்டமாக காலைச் சிற்றுண்டியை வீட்டில் முடித்துக்கொண்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில், 'போர்நிறுத்தம் வரை உண்ணாவிரதம்’ உட்கார்ந்தார்! மதிய உணவு வேளை வந்தவுடன், 'ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக்கொண்டது’ என்று உண்ணாவிரதத்தை முடித்தார். கருணாநிதியின் பேச்சைக் கேட்டு, பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொத்துக்கொத்தாகக் குண்டுகளை வீசிக் கொன்றனர்.
ஐ.நா. குழுவானது அங்கு போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்றுதான் சொல்லி இருக்கிறதே தவிர, ராஜபக்ஷேவும் மற்றவர்களும் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவில்லை. அதனால்தான் இந்த தீர்மானத்தில், 'போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐ.நா-வை வலியுறுத்தவேண்டும்’ என்று குறிப்பிட்டோம்...'' என்று பேசினார்.
இந்தத் தீர்மானம், ஒருமனதாக ஏற்கப்பட்டு சட்ட மன்றத் தீர்மானம் ஆன தகவல் அறிந்தவுடன், ஆதரித்து அறிக்கை விட்டார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன். வைகோ, சீமான் என அடுத்தடுத்து மற்ற ஈழ ஆதரவுத் தலைவர்களும் தீர்மானத்தை வரவேற்றுக் கருத்து வெளியிட்டனர். அன்று இரவு திருமாவளவனின் அறிக்கை வெளியானது.
ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தை முன்மொழிவதற்கு முந்தைய நாளன்று, சட்டப் பேரவையில்  இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சிவகங்கை குணசேகரன் பேசியது தான் அனைத்துக்குமான தூண்டுதல் என்கிறார்கள். ''இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான். அதற்குக் காரணமான ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்குமாறு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!'' என்று இவர் சொன்னார். இந்தக் கோரிக்கைக்கு, முதல்வர் அப்போது எந்த ரியாக்ஷனையும் வெளிக் காட்டவில்லை. ஆனால், மறுநாள் அவரே இதை தீர்மானமாகக் கொண்டுவந்ததை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரே எதிர்பார்க்கவில்லை!
இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. குணசேகரனிடம் கேட்டதற்கு, ''ராஜபக்ஷேவை சர்வ தேச நீதிமன்றத்தின் முன்பு போர்க்குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று கடந்த ஆட்சியில் தீர்மானம் போட வலியுறுத்தினோம். ஆனால், போரை நிறுத் தவே நடவடிக்கை எடுக்காமல் இன அழிப்புக்குக் காரணமான கருணாநிதி, அதைச் செய்யவில்லை. இப்போது, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு உள்ள இந்தத் தீர்மானம், அற்புதமானது! ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் வேண்டும் எனக் கேட்கும் இந்திய அரசு, பக்கத்து நாட்டில் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு இனத்தை அழிக்க உதவியாக இருந்துவிட்டு, மானுட பண்பாடு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?'' என்றார் சூடாக.
தடை பல கடந்து, தமிழக சட்டமன்றத்தில் 'போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்’ என தீர்மானம் நிறைவேறி இருக்கிறது! டெல்லி நாடாளுமன்றத்திலும் இதே  தீர்மானம் வெற்றிபெற, எல்லா கட்சிகளுமே ஒருமனதாகக் குரல்கொடுக்க வேண்டும். நடக்குமா?
- இரா.தமிழ்க்கனல்
படம்: சு.குமரேசன்
'சி.பி.எம். இப்படித்தான்!’
தீர்மானத்தின் மீது பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்’ என்று பேச... தமிழின அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு!
''இலங்கைக்கு எத்தனை உதவிகள் செய்தாலும் அதை தமிழர்களுக்குக் கொடுக்கவே போவது இல்லை. பொருளாதாரத் தடை என்பது ஒரு நாட்டுக்கு வழங்கும் தார்மீகத் தண்டனை. அதை இலங்கைக்குத் தரத்தான் வேண்டும். எல்லோரும் ஒரு கோரிக்கையை வைக்கும் போது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் விநோதமாக எதையாவது சொல்வார்கள்!'' என்கின்றன தமிழர் அமைப்புகள்.
இது பற்றி சவுந்தரராசனிடம் கேட்டதற்கு, ''இதுவரை உலகில் பொருளாதாரத் தடையால் தவறு செய்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்டது இல்லை. அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவர். இலங்கையில் பொருளாதாரத் தடை விதித்தால், இப்போது தமிழ் மக்களுக்குக் கிடைத்துவரும் சிறிதளவு பொருள்களும் உதவிகளும் நின்றுவிடுமோ என்பதுதான் எங்களின் ஆதங்கம்!'' என்றார்

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment