சக்சேனா வழக்கில் திடுக் திருப்பம்
ஆவணங்களை அள்ளிப்போனது யார்?
'மாப்பிள்ளை’ பட விநியோகம் தொடர்பாக, ஹித்தேஷ் ஜபக் என்ற தயாரிப்பாளர் சக்சேனாவுக்கு எதிராக ஒரு புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே சக்சேனாவைக் கைது செய்துவிட்ட போலீஸார், கடந்த 15-ம் தேதி இரண்டு நாள் போலீஸ் காவல் எடுத்து மீண்டும் துருவி இருக்கிறார்கள்.
விசாரணையின் போக்கு குறித்து காக்கிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ''மாம்பலம் ஏ.சி-யான ஞானசேகர் மேற்பார்வையில், சக்சேனாவிடம் விசாரணை நடந்தது. தொடக்கத்தில் கேள்விகளுக்குச் சரிவரப் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். தன் அலுவலகத்தில் அமர்ந்தபடி, இதை லைவ்வாகக் கேட்டுக்கொண்டு இருந்த ஓர் உயர் அதிகாரிக்கு செம டென்ஷன். உடனடியாக போனைப் போட்டு, 'சக்சேனா வாங்கிக் குவித்துள்ள நிலங்கள், பங்களாக்கள், வெளி மாநில முதலீடு மற்றும் சினிமாத் தொடர்புகள்...’ என மொத்த விவரங்களையும் புட்டுவைத்து, 'விசாரணைக்கு ஒத்துழைக்கலைன்னா, இதில் இருந்தும் பிரச்னை கிளம்பும்’னு சொல்லுங்க’ என்று சிடுசிடுக்க... அதன் பிறகு சக்சேனாவிடம் இருந்து தடங்கல் இல்லாமல் பதில்கள் வந்தன!'' என்றனர்.

இதனிடையே சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லி ஹார்ட் பீட்டை எகிறவைக்கிறார் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர். ''சில தினங்களுக்கு முன் சக்சேனா வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று, அங்கு இருந்து பல ஆவணங்களை சத்தம் இன்றி அள்ளிக்கொண்டு போய்விட்டது. 'இதற்கு மூளையாக செயல்பட்டது யார்? அவை என்ன ஆவணங்கள்?’ என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்!'' என்று பகீர் கிளப்பினார்.

இந்தப் பிரச்னையை வெளியே கொண்டுவந்து மொத்த விவகாரத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த ஒரு சினிமா வி.ஐ.பி, ''அவருக்கு இவ்ளோ பிரச்னைகள் வரும்னு சத்தியமா நான் நினைச்சுப் பார்க்கலை. எனக்கு வர வேண்டிய
- தி.கோபிவிஜய்
படம்: வீ.நாகமணி
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment