Tuesday, May 24, 2011

தமிழக பேரவையின் சபாநாயகர் ஆகிறார் டி.ஜெயக்குமார்!

தமிழக பேரவையின் சபாநாயகர் ஆகிறார் டி.ஜெயக்குமார்!
சென்னை, மே 23,2011
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக டி.ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக டி.ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை - ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுக சார்பில் ப.தனபால் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ராசிபுரம் (தனி) தொகுதியில் இருந்து ப.தன்பால் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதிமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், இருவரின் வெற்றியும் உறுதி.


No comments:

Post a Comment