Wednesday, May 25, 2011

கோர்ட்டுக்குத் தேவையா கோடை விடுமுறை?

கோர்ட்டுக்குத் தேவையா கோடை விடுமுறை?

சுதந்திரத்துக்கு முன் நம் நாட்டின் நீதித் துறை யில் உள்ள பதவிகளை, ஆங்கிலேயர்களே பெரும்பாலும் வகித்தார்கள். கோடை வெப்பத்தை சமாளிக்க முடியாத அவர்கள், கோடை நாட்களில் நீதிமன்றத்துக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, குளிர் பிரதேசங்களுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். அந்தக் காலத்தில் நீதிமன்றங்களில்... வழக்குகள் தேங்கிக்கிடப்பதும் இல்லை என்றதால், நிம்மதியாக ஓய்வை அனுபவித்தார்கள்.
ஆனால்... இன்று?
நம் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளில் இருந்து, பணியாளர்கள் வரை அனைவரும் இந்தியர்களே. நம் நாட்டின் பருவ கால மாற்றங்களை அறிந்து வளர்ந்தவர்கள். இது தவிர, நாட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. ஆண்டு முழுவதும் இரவும் பகலுமாக நீதிமன்றம் செயல்பட்டாலும், இந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இப்படி ஒரு சூழலில் நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை தேவைதானா?
விடுமுறை கால நீதிமன்றம் இயங்கினாலும், அது அவசர மனுக்களை மட்டும்தானே விசாரிக்கும். மேல் முறையீடு மனுக்களை விசாரிக்காது என்பதால், தேக்கம் அடையும் வழக்குகளின் எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கிறது. அரசின் அத்தனை துறைகளும் கோடை விடுமுறை இன்றி இயங்கும்போது, நீதிமன்றத்துக்கு மட்டும் விடுமுறை தேவையா?
கோடை விடுமுறை விவகாரத்தை நீதிமன்றம் மறு பரிசீலனை செய்தாக வேண்டும். ஏனெனில், தாமதமாக வழங்கப்படும் நீதியும் ஒரு வகையில் அநீதியே!
- கே.வெங்கடாசலபதி, செங்கல்பட்டு.
Source - Vikatan Magazine

No comments:

Post a Comment