சென்னை, ஏப்.8, 2011
சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "ஓட்டுப் போடுவதற்காக பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் சட்டப்படி குற்றம்.
இந்த நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்காக பணம் கொடுத்த 7 பேரும், பணம் வாங்கிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுப்பவர்களை மட்டுமல்லாமல், பணம் வாங்குபவர்களையும் சேர்த்து பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது," என்றார்.
Source - Vikatan Magazine
சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "ஓட்டுப் போடுவதற்காக பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் சட்டப்படி குற்றம்.
இந்த நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்காக பணம் கொடுத்த 7 பேரும், பணம் வாங்கிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுப்பவர்களை மட்டுமல்லாமல், பணம் வாங்குபவர்களையும் சேர்த்து பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது," என்றார்.
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment