Monday, April 4, 2011

விமானிகளிலும் போலிகளா?

விமானிகளிலும் போலிகளா?


இப்போது டூ வீலர் ஓட்ட உரிமம் வாங்கு​வதற்கே ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனால், லட்சங்களை லஞ்சமாக அள்ளிக் கொடுத்து விமானிகளாகப் பலர் உரிமம் பெற்று இருக்கிறார்கள் என்ற செய்தியால் பெரும் அதிர்ச்சி!
ஒரு விமானி 200 மணி நேரம் விமானம் ஓட்டி நிரூபித்தால்தான் உரிமம் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வு கடினமானது. இதில் பல முறை தோல்வி கண்டவர்கள்தான், பணம் கொடுத்து குறுக்கு வழியில் உரிமம் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் 10 மணி நேரம் மட்டுமே விமானத்தை ஓட்டியவர் எல்லாம், உரிமம் வாங்கி இருக்கிறார் என்பது எத்தனை பெரிய மோசடி?
நம் நாட்டில் 40 விமானப் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தான் பயிற்சி நிலையத்தில்தான் இந்த மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 விமானிகள் போலி உரிமம் பெற்றதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானபோதே, விமானி மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது. மழை, மேகமூட்டம், புயல், ஓடுபாதை நீளம் போன்றவற்றில் விமானிகளுக்குத் தெளிவான அறிதல் வேண்டும். இதற்காகத்தான் 200 மணி நேரம் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. 10 மணி நேரம் மட்டுமே ஓட்டியவர்கள் கத்துக்குட்டி விமானியாகத்தான் கருதப்படுவார்.
இவர் கையில் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள விமானத்​தையும், விலை மதிக்க முடியாத பயணிகளின் உயிர்களையும் ஒப்​படைப்பது எத்தனை பெரிய பயங்கரம். விமானப் பயணம் என்பது ஒரு நாட்டின் மரியாதை சம்பந்தப்பட்டது. இதில் போலிகள் நுழைய அனுமதித்த கொடியவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
- தா.ஆறுமுகம், அம்பூர்பேட்டை.

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment