Friday, May 20, 2011

கனிமொழி கைது.. திமுக அதிர்ச்சி; எம்.பி.க்கள் கண்ணீர்

கனிமொழி கைது.. திமுக அதிர்ச்சி; எம்.பி.க்கள் கண்ணீர்
புதுடெல்லி, மே 20,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழியை கைது செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் திமுக அதிர்ச்சி அடைந்ததுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
இந்த உத்தரவின் போது, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியுடன் இருந்தவர்களில் திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலுவும் ஒருவர்.
அப்போது அவர் கருத்து கூறுகையில், "ரியாக் செய்வதற்கு என்ன இருக்கிறது? திமுக அதிர்ச்சியுற்ற நிலையில் உள்ளது," என்றார் டி.ஆர்.பாலு.
அவருடன் இருந்த மூன்று திமுக எம்.பி.க்கள் மனமுடைந்து கண்ணீர் விட்டனர். ஏனையோர் செல்பேசி வழியாக பத்தற்றத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.

Source - Vikatan

No comments:

Post a Comment