Friday, May 20, 2011

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்!

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்!
புதுடெல்லி, மே 20,2011
ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
கனிமொழியை உடனடியாக கைது செய்ய நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதையடுத்து, கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.
தனது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதும், நீதிபதியின் உத்தரவைக் கேட்கும்போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் கனிமொழி.
"நான் வியப்படையவில்லை. உத்தரவை எதிர்ப்பார்த்தேன். சட்ட ரீதியாக போராடுவேன்," என்றார் கனிமொழி.
பின்னர், கனிமொழி தனது கணவர் அரவிந்தனை ஆறுதலுக்காக கட்டிப் பிடித்தார். அப்போது, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அப்போது, அருகிலிருந்த ஆ.ராசாவின் மனைவி எம்.ஏ.பரமேஸ்வரி கனிமொழி தோளில் கைவைத்து ஆறுதல் கூறினார்.

Source - Vikatan News

No comments:

Post a Comment