Tuesday, May 31, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் : ஆ.ராசா - நீரா ராடியா உரையாடல் பதிவு முழுமையாக (ஆடியோவுடன்)


2ஜி ஸ்பெக்ட்ரம் : ஆ.ராசா - நீரா ராடியா உரையாடல் பதிவு முழுமையாக (ஆடியோவுடன்)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம்... அவுட்லுக் இதழ் வெளியிட்ட டேப் விவரங்களில், நீரா ராடியா - ஆ.ராசா இடையே நடந்தது என  முன்வைக்கப்படும் உரையாடலின் முக்கியப் பகுதிகளின் ஆடியோ வடிவமும், அதன் தமிழ் எழுத்து வடிவமும் இதோ...
ஆடியோ: (நான்கு பதிவுகளையும் தொகுத்து ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது)

மே 22, 2009, 09:48:51
நீரா ராடியா : ஹலோ?
ஆ.ராசா : ராசா ஹியர்.
நீரா : ஹாய்! பர்கா தத்திடம் இருந்து இப்போது தான் எனக்கு தகவல் வந்தது.
ராசா : ஆஹ்?
நீரா : பர்கா தத்.
ராசா : அவர் என்ன சொல்கிறார்?
நீரா : பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்றிரவு செய்திக்காக தொடர்பு கொண்டு இருப்பதாக அவர் சொல்கிறார். உண்மையில், அங்கே சோனியா காந்தி சென்றதாக அவர்தான் என்னிடம் தெரிவித்தார். உங்களுடன் அவருக்கு (பிரதமர்) பிரச்னை இல்லை; ஆனால், பாலுவுடன் தான் அவருக்கு பிரச்னை என்று சொன்னார்.
ராசா : ... ஆனால், அதுபற்றி தலைவர் (கருணாநிதி) உடன் விவாதிக்க வேண்டும்.
நீரா : ஆமாம், ஆமாம்.. தலைவருடன் அவர் விவாதிக்க வேண்டும். அவர் தான் சொல்ல வேண்டும்...
ராசா : அது பற்றி காலையில் விவாதிக்கப்படும்... தேவையில்லாம காங்கிரஸ் ஏன்.. (இரைச்சல்) கூட்டணியில் பிரச்னை.
நீரா : இல்லை, ஆனால் இப்போது அழகிரி பற்றி தானே கேள்வி, இல்லையா?
ராசா : ஆஹ்?
நீரா : அழகிரியே மூத்த தலைவராக இருக்கும்போது, மாறன் ஏன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அழகிரியின் ஆட்கள் சொல்கிறார்கள்.
ராசா : அது வேறு. ஆனால், இந்த எல்லா விஷயங்களையும் வெளிப்படுத்தியாக வேண்டும்.
நீரா : அதுதான் சரி. அதுதான் சரி. காங்கிரஸிடம் இருந்து தகவலைப் பெற அவரிடம் கேட்டேன்.
ராசா : இதனை தலைவரிடம் நேருக்கு நேராகவாவது வெளிப்படுத்த வேண்டும்.
நீரா : தனிப்பட்ட முறையிலா?
ராசா : தனியாகத்தான். எங்களுக்கு பாலுவுடன் சீரியசாக பிரச்னை இருக்கிறது என்று சீலிடப்பட்ட கவரின் மூலமாகவாவது, யாரையாவது அனுப்பி அவரிடம் தகவலை கொண்டு சேர்க்க வேண்டும்.
நீரா : காங்கிரஸிடம் இருந்து தானே, இல்லையா?
ராசா : ஆம்.
நீரா : சரி, அவரிடம் நான் சொல்கிறேன். இப்போது, அகமது படேலிடம் அவர் (பர்கா) பேசிக்கொண்டிருக்கிறார். அவரிடம் (அகமது படேல்) நான் பேசுகிறேன்.
ராசா : சார், இதுதான் எங்க பிரச்னை... எங்களுக்கு உயர் மதிப்பு இருக்கிறது, ராசாவிடம் பிரச்னை இல்லை, ஆனால், பாலுதான் பிரச்னை என்று தொலைபேசி மூலமாவது அவர் அழைக்கலாம் என்று சொல்லுங்கள்.
நீரா : பிறகு, மற்ற பிரச்னையை நீங்கள் எப்படி தீர்ப்பீர்கள்?
ராசா : தலைவர் இறங்கி வருவதால், மற்ற பிரச்னைகள் மெள்ள தீர்ந்துவிடும்.
நீரா : ஓஹ் ஆஹ்.
ராசா : கவலைப்படாதீர்கள்.
நீரா : தலைவர் இப்போது மூன்றுக்கு இறங்கி வந்திருக்கிறார். இல்லையா?
ராசா : மூன்றுக்கு இறங்கி வந்திருக்கிறார்.
நீரா : ம்.
ராசா : கட்டுமானத் துறைக்கு மாறன் சரி வர மாட்டார்... அவரிடம் சர்ச்சை உள்ளது என்று நீங்களும் சொல்கிறீர்கள். பரவாயில்லை, இப்போதைய அமைச்சகத்திலேயே அவர் இடம்பெறட்டும்... நாமாவது கருத்து தெரிவிப்போம்.
நீரா : மாறன்?
ராசா : ம்... நீங்கள் சொல்லுங்க, நீங்கள் தகவல் அனுப்புங்கள்.
நீரா : ஓஹ், ஆஹ்.
ராசா : ஓகே
நீரா : ஓகே.

******
மே 22, 2009, 13:20:29
(ராசாவை நீரா அழைக்கிறார்.)
ராசா : சொல்லுங்க, நீரா.
நீரா : விஷயம் என்னவென்றால், யாரிடம் பேசுவது என்பதில் காங்கிரஸ் முழுமையாக குழம்பியிருக்கிறது.
ராசா : ஆஹ்?
நீரா : திமுகவில் யாரிடம் அவர்கள் பேசவேண்டும்.
ராசா : ஆஹ்... யாராவது தலைவரை பார்க்க விமானத்தில் புறப்படலாமே.
நீரா : இல்லை, இல்லை... அதனால் தான், நான் இப்போது இருக்கிறேன்... இன்னும் சிறிது நேரத்தில் கனியிடம் அவர்கள் பேசுவார்கள், அப்புறம் தலைவரிடம் அவர்களை கனி நேரடியாக பேசச் செய்வார்.
ராசா : அதுதான் நல்லது, அதுதான் நல்லது.
நீரா : ஆமாம், நான் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். ஏனென்றால், யாரிடம் பேசுவது என்று அவர்கள் முழு குழப்பத்தில் இருக்கிறார்கள், ஆஹ்?
ராசா : கனியிடம் அவர்கள் பேசட்டும்.
நீரா : ஆம், ஆனால் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு கனிக்கு பக்குவம் வேண்டும், இல்லையா? நான் அவரிடம் சொல்லிவிட்டேன்...
ராசா : ம்ம்
நீரா : ... ஆனால் நீங்களும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ராசா : நோ ப்ராப்ளம்.
நீரா : அவர்களிடம் சொல்லிவிட்டேன். நான் அவர்களிடம் எதுவாக இருந்தாலும்...
ராசா : இதுதான் பிரச்னை. எனவே, அவர்களை அழைத்து வரட்டுமா என தலைவரிடம் சொல்ல வேண்டும் என்று கனியிடம் சொல்லுங்கள்.
நீரா : சரி. ஏனென்றால், பாலுவுக்கோ அல்லது மாறனுக்கோ கட்டுமானத் துறை கொடுக்கப்பட மாட்டாது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதை தலைவரிடம் அவர்கள் நேரடியாக சொல்ல வேண்டும், இல்லையா?
ராசா : பிரச்னையே இல்லை. பாருங்க... கனியுடன் அவர்கள் சென்று, இந்த ஆட்களுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சொல்லட்டும்.
நீரா : அதுதான் சரி. அதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும்... என்ன நடந்திருக்கிறது என்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம் என்றால் மாறன் தான் உடன் செல்கிறார்... அதனால் மாறனிடம் தான் தகவலை பரிமாற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு குழப்பம்..
ராசா : ஒருபோதும் இல்லை. உதவி செய்வதற்குத்தான் அவர் வந்தார். அவ்வளவுதான்.

*********
மே 23, 2009, 14:29:41
நீரா : எப்படி இருக்கிறீர்கள் ராசா?
ராசா : ஹாங், அவர் என்ன சொல்கிறார், கனி என்ன சொல்கிறார்?
நீரா : தனக்கு ஏற்புடையதாக அவர் சொல்கிறார். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை...
ராசா : ம்.
நீரா : ... ஆனால், ஒரே விஷயம் என்னவென்றால், அழகிரியிடம் எவராவது போய் பேச வேண்டும். அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.
ராசா : ம்
நீரா : அப்புறம், மாறன் எப்படிப் போய் எல்லா இடத்திலும் சொல்லி வைத்திருக்கிறார் என்று அவரிடம் சொல்லுங்கள்.
ராசா : ஹாங், நான் ஏற்கெனவே அவருடன் பேசிவிட்டேன், நான் ஏற்கெனவே அவருடன் பேசிவிட்டேன்...
நீரா : காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் (மாறன்) என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதை அவரிடம் சொல்லிவிட்டீர்களா?
ராசா : எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை காங்கிரஸாரின் மனத்தில் விதைத்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும்... எனக்குத் தெரியும்...
நீரா : இல்லை. இல்லை. இல்லை. இல்லை. அதுமட்டுமில்லை. அதுமட்டுமில்லை. தலைவருக்கு வயதாவதால் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதிக நாட்களுக்கு தாங்காது. அதன் பிறகு, கட்சியை நடத்துவது தானும் (மாறன்) ஸ்டாலினும் தான் என்றும், அப்போது ஸ்டாலினை கட்டுக்குள் வைத்திருப்பது தாம் தான் என்பதால்,  தன்னுடன் காங்கிரஸ் நெருக்கம் காட்டிக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறது என்றும் அவர் சொல்லி வருகிறார்.
ராசா : ம்ம்ம்...
நீரா : இதைத் தான் அவர் சொன்னார்.
ராசா : ஓஹோ! ஓஹோ!
நீரா : அப்புறம், அந்த அழகிரியை கிரிமினல் என்றும்...
ராசா : ம்ம்...
நீரா : அப்புறம் அவர் 5ம் வகுப்புக்கு மேல் கூட அவர் படிக்வில்லை என்றும்.
ராசா : ஓஹ்...
நீரா : இதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
ராசா : ஓகே, ஓகே.
நீரா : நீங்கள் போய் அவரிடம் இதை சொல்வீர்கள், இல்லையா?
ராசா : இல்லை. அழகிரிடம் நான் பகிர்ந்துகொண்டேன்... அவர் போய் தலைவரிடம் பேசப் போனார்.
நீரா : நான் மட்டும் தான் எந்த விஷயத்திலும் அணுகுவேன். ஏனென்றால், ஸ்டாலின் மாநிலத்திலேயே தான் இருப்பார் என்றும் அவர் டெல்லியில் சொல்லி வருகிறார்.
ராசா : எனக்குத் தெரியும். அவர் எந்த மாதிரியான பிரசாரம் செய்கிறார் என்று எனக்குத் தெரியும்...
******
மே 24, 2009, 11:05:11
நீரா : ஹாய்!
ராசா : ஹலோ?
நீரா : ஹாய்!
ராசா : சொல்லுங்க.
நீரா : மிஸ்டர் ராசா?
ராசா : ஆமா?
நீரா : நீரா
ராசா : சொல்லுங்க நீரா, ஏதாவது?
நீரா : உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். கனியிடம் பேசினேன். அதனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், அடிப்படையில் நீங்கள் அங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ராசா : ஹாங்.
நீரா : நீங்கள் அங்கு இருக்க வேண்டும் என்று தலைவர் பொதுவாகச் சொல்கிறார். ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், தலித் டிஸ்பென்ஷன், திராவிடர், கட்சி என்று எல்லாம்... தலைவர் சொல்வது எல்லாம்... உங்களுக்குத் தெரியும். அவரிடம் விட்டுவிட்டால், கட்சி மீது மட்டும் முதலில் கவனம் செலுத்துவார். அவரது குடும்பம் உள்ளே வருவது துரதிஷ்டவசமானது.
ராசா : ஓகே
நீரா : ஆனால், கனியுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். "தனி இலாகா இல்லை" என்று அவர் சொன்னார். அவர்கள் தனி இலாகா தர மாட்டார்கள்...
ராசா : என் விஷயம் சரியாகிவிட்டது, அல்லவா?
நீரா : உங்களுடையது தெளிவாகிவிட்டது. ஆமாம். நேற்று இரவு தான் உங்கள் விஷயம் சரியானது.
ராசா : ஓகே
நீரா : இல்லை, ஆனால் தயாவுக்கு என்ன ஆச்சு?
ராசா : என்ன?
நீரா : தயா?
ராசா : மீதமிருப்பது என்றால்... ஜவுளி அல்லது உரம்
நீரா : தயாவுக்கு இல்லை..?
ராசா : இருவரில் ஒருவருக்கு.
நீரா : ஆனால், அழகிரி அல்லது தயா? ஒருவர் தானே வர முடியும், இல்லையா?
ராசா : இல்லை. இரண்டு. இரண்டு பேருமே வர முடியும்.
நீரா : இருவருமா?

ராசா : பாலுதான் தான் பிரச்னைன்னு, நம்புகிறேன்.
நீரா : மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்வது என்பது தலைவருக்கு கடினம் தான் என்று நினைக்கிறேன்.
ராசா : அதுதான், அதேதான்... (சிரிக்கிறார்) எல்லாருக்குமே தெரியும்.
நீரா : இல்லை, இல்லை, அவர் சொன்னார். தன்னிடம் நேற்றிரவு அப்பா என்னச் சொன்னாரோ அதை என்னிடம் கனி கூறினார்.
ராசா : ஓஹ்.
நீரா : மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் சரியாகச் செய்வது என்பது அவருக்கு மிகவும் கடினமாகிறது. அந்தப் பிரச்னையை அவர் உணர்ந்துள்ளார்.
ராசா : நீங்கள் என்ன செய்வீர்கள்? பார்க்கலாம். காத்திருப்போம்.
நீரா : ஆம், அதுபற்றி அவர் மறுபடியும் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரை இப்போது நீங்கள் எல்லாரும் தனியாக சந்திக்கிறீர்களா? அல்லது கூட்டம் போய்க் கொண்டிருக்கிறதா?
ராசா : ஒருபோதும் இல்லை. ஒருபோதும் இல்லை.
நீரா : நாராயணனுடனான சந்திப்பு போய்க்கொண்டிருக்கிறதா?
ராசா : நாராயணனுடன் சந்திப்பு முடிந்துவிட்டது. அவர் 'கவர்' உடன் டெல்லி சென்றுவிட்டார்.
நீரா : அவர் சென்றுவிட்டாரா?
ராசா : அவர் 'கவர்' உடன் விமானத்தைப் பிடிக்கச் சென்றுவிட்டார்.
நீரா : நாராயணனா?
ராசா : லிஸ்ட், லிஸ்ட்... லிஸ்ட் உடன் அவர் சென்றுவிட்டார்.
நீரா : லிஸ்ட் உடன் அவர் சென்றுவிட்டார், இல்லையா?
ராசா : அந்த கவர் உள்ளே என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது.
நீரா : அப்புறம் கனி? அப்பாவுடன் இருக்கிறாரா?
ராசா : இருக்கலாம்.. அவருக்கு தெரிந்திருக்கலாம்.
நீரா : அவருக்கு இப்போது நான் அழைக்கிறேன். அப்புறம், அங்கே நீங்கள் இல்லையா?
ராசா : நான் இன்னும் அங்கே போகவில்லை.
நீரா : நீங்கள் அங்கே இல்லையா? அப்புறம் மாறன்? மாறன் அங்கே இருக்கிறார், இல்லையா?
ராசா : (அவர்) அங்கே, ஆமாம்.
நீரா : நீங்கள் ஏன் போகவில்லை?
ராசா : நான் போகவில்லை.
நீரா : ஹாங்?
ராசா : சரி... நான் ஏன் போகனும்?
நீரா : நீங்கள் அங்கே இருக்க வேண்டும், இல்லையா?
ராசா : நோ ப்ராப்ளம்.. காலையில் சந்தித்தேன். அப்புறம், வேறு வேலைக்குத் திரும்பிவிட்டேன்.
நீரா : அப்புறம் அழகிரி... தன்னைப் பற்றி மாறன் சொன்ன விஷயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியுமா?
ராசா : ... இதேல்லாம் அழகிரிக்கு தெரிந்ததே.
நீரா: இது தெரியும், இல்லையா?
ராசா: இது அழகிரிக்குத் தெரியும், ஆனால் அவரால் தன்னுடைய தந்தையுடன் இதுபற்றி பேச முடியாது. சரியான நேரத்தில்... அவர் பேசுவார். ஒரு விஷயம் என்னவென்றால், எனக்கு எதிராக மாறன் பிரசாரத்தை தொடங்குவார்...
நீரா : ம்.
ராசா: ... அதை விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீரா: வேறுவிதமாக நீங்கள் சண்டை போட வேண்டும்.
ராசா: ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார்... அப்படி இப்படி... ஸ்பெக்ட்ரம்... என அவர் பத்திரிகைகளிடம் சொல்லக் கூடும்...
நீரா: இல்லை, இல்லை... நாங்கள் கையாண்டு கொள்கிறோம்... கவலைப்பட வேண்டும். நாங்கள் நிறைய பெற வேண்டியிருக்கிறது, உங்களுக்குத் தெரியும், காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, இல்லையா? சுனில் மிட்டலுடன் நான் பேசினேன்... உங்களிடம் சந்தோலியா சொன்னாரா?
ராசா: எனக்குத் தெரியாது.
நீரா: அவரை நிறுத்தச் சொன்னேன். யாருக்கும் உபயோகமில்லை என்று அவரிடம் நான் சொன்னேன்...
ராசா: ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் பணிபுரிய வேண்டும் என்று சுனில் மிட்டலிடம் சொல்லுங்கள். அதனால்..
நீரா: நான் அவரிடம் சொன்னேன். அவரிடம் சொல்லிவிட்டேன். ஆனால், நீங்களும் அனிலிடம் சற்று தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருந்தாக வேண்டும்.
ராசா : ஆஹ் அது நாம பார்த்துக்கலாம்.
******

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment